பயணக் கட்டுப்பாட்டை நீக்குமாறு தேரர் ஒருவர் பிரதான வீதியின் நடுவில் அமர்ந்து எதிரிப்பு ஆர்ப்பாட்டம்

Date:

தம்புள்ள பொருளாதார மையம் அருகே வீதியின் நடுவில் தேரர் ஒருவர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

திம்புலாகல விகாரை வசிக்கும் மாத்தளே ஷாசரத்ன எனும் தேரரே இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டுள்ளார்.

தேரர் வீதியின் நடுவே அமர்ந்து நாட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார். தம்புள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் இவரை அகற்ற எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

பின்னர் தம்புள்ள நகராட்சி மன்றத்தின் மேயர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, ஜனாதிபதி செயலகத்துடன் ஒருவரை தொடர்பு கொள்ள நகராட்சி மன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் அவர் நகரசபையில் செயலாளர் ஒருவருடன் தொலைபேசியில் பேசும் வாய்ப்பு கிடைத்ததாகவும் பின்னர் அறிக்கை இன்றை பெற்றுக்கொள்வதற்காக தேரரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவரது வேண்டுகோள் என்னவென்றால், ‘நாடு மூடப்பட்டுள்ளது, ஆனால் கடைகள் திறக்கப்படுகிறது, வர்த்தகம் செய்யப்படுகிறது, நாட்டை இவ்வாறு மூடியிருப்பது எந்த அர்த்தமும் இல்லை, சரியாக நாட்டை மூடவும், மக்களுக்கு பொய் சொல்லாமல் நாடு முழுவதையும் திறக்கவும். ‘
ஜனாதிபதிக்கும் தேரர் வன்மையாக கண்டித்துள்ளார்

https://fb.watch/678mqBthYd/

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...