நாட்டில் தற்போது எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை காரணமாக மின்சார கட்டணத்தையும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார பொது சேவையாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளதாக சங்கத்தின் தலைவர் மாலக்க விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும், மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான தேவை இல்லை எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில், மின் சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன கூறுகையில். மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான எந்த ஒரு தீர்மானமும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டார்.