அடுத்த மாதம் 40 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கை வரவுள்ளது

Date:

இலங்கைக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் மேலும் 40 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கை வந்தடையவுள்ளதாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

மேலும், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகளே இவ்வாறு கொண்டுவரப்படவுள்ளன.இலங்கைக்கு ஒரே தடவையில் கிடைக்கப்பெறும் ஆகக்கூடியளவான தடுப்பூசி தொகை இதுவாகும்.

ஆகஸ்ட் மாதம் 4 – 8 ஆம் திகதிகளுக்கு இடையில் குறித்த தடுப்பூசிகளை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளதாக சீனாவிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

இந்த தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றவுடன், சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட சைனோபாம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 20 இலட்சமாக உயர்வடையவுள்ளது.

இவற்றில் 27 இலட்சம் தடுப்பூசிகள் சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு  நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...