அரசாங்கத்தின் சட்ட விதிமுறைகள் துஷ்பிரயோகமானது நாட்டின் மீதான பொருளாதார தடைக்கு வழிவகுத்திருக்கின்றது-நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் காட்டம்!

Date:

அரசாங்கம் சட்ட விதிமுறைகளை துஷ்பிரயோகம் செய்வது நாட்டை வேறொரு விதமாக பாதித்திருக்கின்றது. அது ஐரோப்பிய ஒன்றியம் சுற்றி வளைத்து, இலங்கையின் மீதான பொருளாதார தடையை கொண்டு வருவதற்கு வழிவகுத்திருக்கின்றது. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்போர் மீதான சில நடவடிக்கைகளின் விளைவாக இவ்வாறான விபரீதம் ஏற்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை (திருத்த) சட்டமூலம், சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றிற்கு எதிரான சமவாயம் (திருத்தம்) சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான ஒரு கட்டளை மற்றும் காணாமற் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

.

Popular

More like this
Related

தேர்தல் சட்ட மறுசீரமைப்பு: சாய்ந்தமருதில் சிவில் சமூக அமைப்புகளின் விசேட செயலமர்வு!

இலங்கை தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு பொதுமக்களிடமிருந்து...

முன்னணி இஸ்லாமிய அறிஞர் மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வி காலமானார்

முன்னணி இஸ்லாமிய அறிஞரும், எழுத்தாளரும், கல்வியாளருமான மௌலானா  சையத் சல்மான் ஹுசைனி...

பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 18,412 தன்சால்கள் பதிவு!

பொசொன் பெளர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 18,000-க்கும் மேற்பட்ட ‘தன்சால்கள்’...

வரலாற்றுச் சிறப்புமிக்க பொசன் பௌர்ணமி தினம் இன்று!

இலங்கையில் பௌத்த தர்மம் உருவாகிய தினத்தை பொசன் பௌர்ணமி தினமாக பௌத்தர்கள்...