ஆப்கானிஸ்தான் ‘ஜனாதிபதி மாளிகை’ அருகே தாக்குதல்

Date:

ஆப்கானிஸ்தானில் பக்ரித் தொழுகையின் போது ‘ஜனாதிபதி மாளிகை’ அருகே ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பக்ரீத் தொழுகையின் போது ஜனாதிபதி மாளிகை அருகே மூன்று ராக்கெட்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட் தாக்குதலால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதங்கள் குறித்த உறுதியாக தகவல் எதுவும் வெளியாவில்லை. ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி மாளிகை அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
“இன்று ஆப்கானிஸ்தானின் எதிரிகள் காபூல் நகரின் பல்வேறு பகுதிகளில் ராக்கெட் தாக்குதல்களை நடத்தினர். அனைத்து ராக்கெட்டுகளும் மூன்று வெவ்வேறு பகுதிகளைத் தாக்கின. எங்கள் ஆரம்ப தகவல்களின் அடிப்படையில், எங்களுக்கு எந்த உயிர் சேதமும் இல்லை. எங்கள் குழு விசாரித்து வருகிறது” என்று அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மிர்வாஸ் ஸ்டானிக்ஸாய் கூறினார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...