இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் இலங்கை 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி!

Date:

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டி 20 போட்டியில் இலங்கை 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணிக்கு அழைப்பு விடுத்தது.

 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

 

இந்திய அணி சார்பில் அணித்தலைவர் சிகர் தவான் அதிகபட்சமாக 40 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.பந்து வீச்சில் அகில தனஞ்சய 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

 

அதன்படி, 133 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

 

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.மினோத் பானுக 36 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

 

பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.இதற்கமைய, மூன்று போட்டிகள் கொண்ட  டி20 தொடர் 1-1 கணக்கில் தற்போது சமநிலையில் உள்ளது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...