இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள்

Date:

இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் நாளை மறுதினம் கிடைக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகள் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளதாக அந்த தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று வரை 8,439,469 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் 6,693,072 பேர் முதலாவது தடுப்பூசிகளை மாத்திரம் செலுத்தி கொண்டவர்கள் என தொற்று நோயியல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் 1,746,397 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டவர்கள் என அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதில் பெரும்பாலானோருக்கு சைனோபாம் தடுப்பூசிகளே செலுத்தப்பட்டுள்ளன.

இதன்படி 6,265,371 சைனோபாம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய 4,919,323 பேர் சைனோபாம் முதலாம் தடுப்பூசியையும், 1,346,048 பேர் சைனோபாம் இரண்டாம் தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டுள்ளதாக தொற்று நோயியல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...