இலங்கையில் டெல்டா திரிபு குறித்து அறிக்கையிடப்படும்போது பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது பொருத்தமில்லை  | பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம்

Date:

இலங்கையில் பல்வேறு பகுதிகளிலிருந்து டெல்டா கொவிட் திரிபுகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் பயணக் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது பொருத்தமானதல்லவென பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், டெல்டா வகையானது எதிர்காலத்தில் நாட்டில் பரவக்கூடிய பிரதான கொவிட் வகையாக மாறும் என அதன் தலைவர் உபுல் ரோஹண சுட்டிக்காட்டுகிறார். தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்திய பல நாடுகளும் டெல்டா கொவிட் திரிபு பரவுவதால் பயணக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக உபுல் ரோஹன கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்,
“எவ்வாறாயினும் அடுத்த சில நாட்களில், கொவிட் -19 டெல்டா வகை இலங்கையின் முன்னணி தொற்றுநோய்களில் ஒன்றாக மாறும். டெல்டா வகை முதன்மையான இனமாக மாறினால், இலங்கை முன்னெப்போதையும் விட ஆபத்தான ஒரு தொற்று நோயை எதிர்கொள்ளும். இந்தச் சூழ்நிலையை அரசாங்கமும் மக்களும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். எதிர்காலத்தில் நாட்டில் ஒரு பேரழிவு சூழ்நிலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அது மிகவும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைக்கு வழிவகுக்கும்.” என்றார்.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...