கம்மன்பிலவிற்கு எதிரான பிரேரணைக்கு எதிராக வாக்களித்த மக்கள் காங்கிரஸ் எம்.பிக்கள்!

Date:

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

குற்றப்புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அக்கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன், திடீரென சுகயீனமுற்றதால், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனால் அவர், இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம் மற்றும் எம்.எம்.முஷாரப் ஆகியோர் நம்பிக்கையில்லா பிரேரணையினை எதிர்த்து வாக்களித்தனர்.

இவர்கள் மூவரும் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்ததனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே இன்று கொண்டுவரப்பட்ட அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...