இன்று காலை கைது செய்யப்பட்ட முன்னிலை சோசலிச கட்சி உறுப்பினரான துமிந்த நாகமுவ உள்ளிட்ட 6 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கோட்டை நீதவான் நீதிமன்றில் அவர்கள் இன்று (07) முற்படுத்தப்பட்ட போது இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகநபர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக அததெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கொம்பனி தெருவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்ட காரணத்தினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.