கொழும்பில் நேற்றைய தினம் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம்!

Date:

நேற்றைய தினம் (16) இனங்காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகி உள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

இதற்கமைய ​கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 252 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகி இருந்தனர்.

 

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 232 தொற்றாளர்களும், களுத்துறையில் 153 பேரும் மற்றும் பதுளையில் 140 பேரும் தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர்.

 

அதனடிப்படையில் நேற்றைய தினம் நாட்டில் மொத்தமாக 1,517 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

அத்துடன் நேற்றைய தினம் தொற்றுக்கு உள்ளானவர்களுள் 71 பேர் வௌிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...