தங்காலை நகர சபையின் புதிய தலைவர் பதவியேற்பு!

Date:

தங்காலை நகர சபையின் புதிய தலைவர் W.P.ஆரியதாச பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் இன்று (29) முற்பகல் அலரி மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார்.

 

சமுத்திர பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற ஆலோசகரான ஆரியதாச மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நகரசபை உறுப்பினராக சேவையாற்றியுள்ளார்.

 

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தலைவர் ரவிது வெதஆராச்சி அக்கட்சியினால் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக W.P.ஆரியதாச இரகசிய வாக்கெடுப்பின் மூலம் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

 

ஆரியதாசவின் பதவியேற்பின்போது விமானச் சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் D.V.சானக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம், பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன உள்ளிட்ட தங்காலை நகர சபை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...