நாடாளுமன்றத்தில் எம்.பிக்களை சந்திக்க பொதுமக்களுக்கு விரைவில் அனுமதி!

Date:

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்காக முன்னர் வழங்கப்பட்டிருந்த அனுமதியினை மீண்டும் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

பொதுமக்கள் சந்திப்புக்கான அறைகளை ஒதுக்குவதற்கு சபை முதல்வர் தினேஸ் குணவர்தன நடவடிக்கை எடுத்துள்ளதாக சபை முதல்வர் காரியாலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பொதுமக்களை சந்திப்பதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 10 அறைகள் ஒதுக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்தன.

 

இந்தநிலையில், 7 அறைகளை முதற்கட்டமாக ஒதுக்குவதற்கு சந்தர்ப்பம் உள்ளதாக படைக்கல சேவிதரினால் சபை முதல்வருக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.

 

இதற்கமைய, நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படும் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களை பொதுமக்கள் சந்திப்பதற்கான அறைகள் திறக்கப்படும் என சபை முதல்வர் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...