நாளை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து, தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

Date:

நாளை (1)முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

 

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பயணிகளுக்காக இவ்வாறு போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.அதற்கமைய, ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச்செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

இதேவேளை, முன்னதாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து மற்றும் பேருந்து சேவைகள், அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக கடந்த 14 ஆம்திகதி மீள ஆரம்பிக்கப்பட்டது.

 

எனினும், கொவிட் பரவல் நிலைமைய கருத்திற்கொண்டு கடந்த 17 ஆம்திகதி முதல் நாளை (1) வரை குறித்த சேவைகளை இடைநிறுத்த போக்குவரத்து இராஜாங்க இராஜாங்க அமைச்சரினால் தீர்மானிக்கப்பட்டது.

 

இந்நிலையில், திங்கள் முதல் பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டால் நாளை மறு தினம் (2) முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

 

எனினும், தற்போது நாளை முதல் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தை முன்னெடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம் அறிவித்தார்.

 

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...