பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு மேலுமொரு சந்தர்ப்பம்

Date:

நாட்டில் நிலவிய அசாதாரண சூழல் காரணமாக பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு மேலுமொரு சந்தர்ப்பத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

இதனடிப்படையில், 2021 ஜூலை 26 முதல் 2021 ஜூலை 30 வரையிலான காலப்பகுதியில் இணைய வழி (online) விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க சந்தரப்பம் வழங்கப்படுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலுமத, இக்காலப்பகுதியில் ஒன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பவர்களுக்கு அடுத்து வரும் இரு வார காலப்பகுதியில் தமது பாடநெறித் தெரிவை மீள ஒழுங்குபடுத்த சந்தர்ப்பம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜுலை 31 முதல் ஓகஸ்ட் 14 வரை இச்சந்தர்ப்பம் வழங்கப்படும் என ஆைணைக்குழு அறிவித்துள்ளது

விண்ணப்பத்திற்கான இணைப்பு 26 ஆம் திகதி முதல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...

சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

-எம்.யூ.எம்.சனூன் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் (14) நடைபெற்ற அகில இலங்கை...

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...

பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (22) நாட்டின் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா,...