மணமகன் மற்றும் மணப்பெண்ணுக்கு விசேட அனுமதி அறிவிப்பு- பொலிஸ் ஊடகப்பிரிவு !

Date:

திருமண பந்தத்தில் இணையவுள்ள மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோருக்கு மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்காக விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு மாகாணங்களில் வசிக்கும் மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோருக்கு பயணக் கட்டுப்பாடுகளின் போது, ஏற்பட்ட சிக்கல்களை கருத்திற்கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோரின் பெற்றோர்களுக்கும் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாரிடம் தெளிவுபடுத்துமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...