மாகாணங்களுக்கு இடையிலான நடமாட்டக்கட்டுப்பாடு நீடிப்பு!

Date:

நாட்டில் தற்போது அமுலாக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொவிட் பரவலை தடுப்பதற்கான
தேசிய செயலணியின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை
தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொவிட் பரவல் நிலைமை அதிகரித்து வந்ததன் காரணமாக
மாகாணங்களுக்கிடையில்
பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இதேவேளை, தற்போதைய
நடமாட்டக்கட்டுப்பாடு தளர்வுகள் நாளை முதல் எதிர்வரும் 14
நாட்களுக்கு அமுலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, 19ஆம் திகதியின் பின்னரே மீளவும் பயணக்கட்டுப்பாடு
விதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும்
எனவும் இராணுவ தளபதி மேலும்
குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் வெளியீட்டு விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...