முல்லைத்தீவில் வறட்சியால் வாடும் மக்களுக்கு இராணுவத்தினரால் குடிநீர் விநியோகம்!

Date:

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சி காரணமாக குடிநீர் பற்றாக்குறை நிலவும் பிரதேசங்களுக்கு இராணுவத்தினரால் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..

 

முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் உள்ள இராணுவத்தினர் மற்றும் விமானப்படையினர் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கேப்பாப்புலவு சூரிபுரம், பிரம்படி மற்றும் பிலக் குடியிருப்பு போன்ற பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றனர்.

 

இதேபோன்று ,ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளிலும் கரைதுறைப்பற்று பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கும் இராணுவத்தினர் பவுசர் மூலம் குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...