மூன்று வேளையும் உணவுக்கே மக்கள் கஷ்டப்படுகின்றார்கள்-விழித்துக் கொண்ட பஷில்!

Date:

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையினை குறைப்பது எமது முதற்கட்ட செயற்பாடாக அமையும் எனத் தெரிவித்த நிதியமைச்சர் பஷில் ராஜபக்க்ஷ, இதற்கு அனைத்து தரப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

நிதியமைச்சருக்கும், உள்ளூராட்சிமன்ற பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் இடம் பெற்றது.இதன் போது கருத்துரைக்கையில் நிதியமைச்சர் பஷில் ராஜபக்க்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

மூன்று வேளையும் உணவு பெற்றுக் கொள்ள வசதியில்லாத மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பல்வேறு எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்கள் ஆட்சியதிகாரத்தை கையளித்துள்ளார்கள். ஆகவே அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலையினை குறைப்பதற்கு அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....