யானைப் பசியுடன் காத்திருந்த மக்களுக்கு சோளப்பொரியையாவது வழங்காத நிலைப்பாட்டில் ஜனாதிபதியின் உரை அமைந்தது – இம்ரான் மஹ்ரூப் காட்டம்

Date:

பல வாரங்களாக முடக்கம், எரிபொருள் விலை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளால் இன்று மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி இருக்கின்றனர். அவற்றை ஜனாதிபதி உரையில் உள்வாங்குவார் என்று மக்கள் எதிர்பார்த்த போதும் அது நிறைவேறவில்லை. அவரது உரையில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கும் தீர்வு இருக்கவில்லை. எனவே யானைப் பசியுடன் காத்திருந்த மக்களுக்கு ஒரு சோளப்பொறியேனும் தராத ஒரு நிலைப்பாடாகவே ஜனாதிபதியின் உரை காணப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

நேற்று(30) எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Xpress Perl கப்பல் தீப்பிடித்ததை தொடர்ந்து நூற்றுக்கணக்கான கடலாமைகள் இறந்துள்ளன. எத்தனையோ டொல்பின்கள், திமிங்கிலங்கள், மீன் இனங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் தொழில்களை இழந்துள்ளனர். எனினும் அரசாங்கம் மௌனம் காப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...