ரயில் கடவையில் இடம்பெற்ற பயங்கர விபத்து!

Date:

பெண் ஒருவர் செலுத்தி வந்த மோட்டார் வாகனம் ஒன்று நேற்று (06) மாலை கிருலபனை பூர்வாராம ரயில் கடவையில் ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த மோட்டார் வாகனத்தில் மேலும் ஒரு பெண் பயணித்துள்ள நிலையில் குறித்த இருவரும் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நுகேகொடை ரயில் நிலையத்தினால் ரயில் கடவை கேட்டை மூடுவதற்கான உரிய சமிக்ஞை பெற்றுக் கொடுக்காததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்தில் மோட்டார் வாகனம் கடுமையாக சேதம் அடைந்துள்ளது.கொள்ளுபிட்டியில் வேலைத் தளத்தில் இருந்து மஹரகமவில் அமைந்துள்ள வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்த போது குறித்த இரு பெண்களும் விபத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

கொழும்பில் இருந்து பாதுக்கை நோக்கி பயணித்த ரயில் ஒன்றிலேயே குறித்த மோட்டார் வாகனம் மோதியுள்ளது.

விபத்தில் சுமார் 8 அடி தூரம் மோட்டார் வாகனம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...

பலஸ்தீனத்திற்கான உலக ஒற்றுமை பேரணி கொழும்பில்: ஆசிய நாடுகள் இணையும் மனிதாபிமானப் போராட்டம்!

கொழும்பில் ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விஹார...

இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் குமார ஜயகொடி தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின்...