விவசாயிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்க தீர்மானம்!

Date:

விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தில் பதிவு செய்துள்ள மற்றும் 1.6 மில்லியன் குத்தகை விவசாயிகளுக்கும் விவசாய அடையாள அட்டைகளை வழங்க விவசாய அமைச்சு தயாராகி வருகிறது.

 

விவசாய அடையாள அட்டைகளை வழங்குவது 1971 இல் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் அந்த திட்டம் தற்போது செயலற்றதாகியுள்ளது.

 

இதன் காரணமாக விவசாயியின் அடையாளத்தை உறுதிப்படுத்த ஒரு ஆவணம் இல்லாமை மற்றும் விளைச்சலுக்கான கடன்களைப் பெற்றுக்கொள்ளும் போது அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாமை உள்ளிட்ட பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக விவசாய அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.

 

வயல் அல்லாத நிலங்கள் தொடர்பான தகவல் அமைப்பை அமைத்து, நில உரிமையாளர்களுக்கும், குடியிருப்பாளர்களுக்கும் இரண்டாம் கட்டத்தில் விவசாய அடையாள அட்டையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

அடையாள அட்டைகளை வழங்குவதனூடாக விவசாயிகளுக்கு பல நன்மைகள் கிடைக்கும் எனவும் விவசாய அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...