அசாத் சாலியின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனு ஆகஸ்ட் 10 இல் விசாரணைக்கு!

Date:

மேல்மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரிப்பதற்கான தினத்தை உயர்நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

 

இந்த மனு குறித்து இன்று பரிசீலிக்கப்பட்ட வேளையில், அதனை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி விசாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

 

இஸ்லாமிய சட்டம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டமைக்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு தடுப்பில் உள்ளார்.

 

அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

எவ்வாறாயினும் அவர் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக அவர் சார்பில் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் உ செய்யப்பட்டுள்ளது.இந்த மனுவே எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...