அசாத் சாலியின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனு ஆகஸ்ட் 10 இல் விசாரணைக்கு!

Date:

மேல்மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரிப்பதற்கான தினத்தை உயர்நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

 

இந்த மனு குறித்து இன்று பரிசீலிக்கப்பட்ட வேளையில், அதனை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி விசாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

 

இஸ்லாமிய சட்டம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டமைக்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு தடுப்பில் உள்ளார்.

 

அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

எவ்வாறாயினும் அவர் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக அவர் சார்பில் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் உ செய்யப்பட்டுள்ளது.இந்த மனுவே எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...