ஆப்கானிஸ்தான் ‘ஜனாதிபதி மாளிகை’ அருகே தாக்குதல்

Date:

ஆப்கானிஸ்தானில் பக்ரித் தொழுகையின் போது ‘ஜனாதிபதி மாளிகை’ அருகே ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பக்ரீத் தொழுகையின் போது ஜனாதிபதி மாளிகை அருகே மூன்று ராக்கெட்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட் தாக்குதலால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதங்கள் குறித்த உறுதியாக தகவல் எதுவும் வெளியாவில்லை. ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி மாளிகை அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
“இன்று ஆப்கானிஸ்தானின் எதிரிகள் காபூல் நகரின் பல்வேறு பகுதிகளில் ராக்கெட் தாக்குதல்களை நடத்தினர். அனைத்து ராக்கெட்டுகளும் மூன்று வெவ்வேறு பகுதிகளைத் தாக்கின. எங்கள் ஆரம்ப தகவல்களின் அடிப்படையில், எங்களுக்கு எந்த உயிர் சேதமும் இல்லை. எங்கள் குழு விசாரித்து வருகிறது” என்று அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மிர்வாஸ் ஸ்டானிக்ஸாய் கூறினார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...