இலங்கை கிரிக்கெட் அணியின் செயற்திறன் ஆய்வாளருக்கு கொரோனா

Date:

இலங்கை அணியின் பயிற்சி ஊழியர்களில் மற்றொரு உறுப்பினருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் விளையாட்டு செயற்திறன் ஆய்வாளர் தனுஜ நிரோஷ் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கிரிக்கெட் அணியில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் இவர். முன்னதாக, இலங்கையின் பேட்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

சுற்றுப்பயணத்தில் இருந்த அனைத்து வீரர்கள் மற்றும் பணியாளர்கள் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை கடுமையான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...