எப்போது நாடு முழுமையாக திறக்கப்படும்?  இராணுவதளபதி வெளியிட்ட தகவல் 

Date:

அனேகமாக செப்டம்பர் மாதமளவில் நாட்டை முழுமையாக திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இராணுவதளபதி சவேந்திரசில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.கொரோனா வைரசினை தாகமுடைய அனேகமானவர்கள் ஒரு டோஸ் தடுப்பூசியையாவது பெற்றிருப்பார்கள் என்ற அடிப்படையில் நாட்டை செப்டம்பர் மாதமளவில் திறக்க முடியும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது அவ்வேளையில் காணப்படும் நிலவரத்தை பொறுத்தே இந்த முடிவை எடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.தொடர்ச்சியாக மாற்றமடைந்திருக்கும் வைரசினை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ள சவேந்திரசில்வா இதன் காரணமாக புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
நிலைமையை எதிர்வுகூறமுடியாது என தெரிவித்துள்ள சவேந்திரசில்வா செப்டம்பரில் நாட்டை முழுமையாக திறக்க முடியும் என உறுதியாக தெரிவிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...