ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கத்தோலிக்க பேச்சாளர்கள் குழுவினால் ஜனாதிபதிக்கு 19 பக்கங்களைக் கொண்ட கடிதம்!

Date:

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், தேசிய கத்தோலிக்க பேச்சாளர் குழு, ஜனாதிபதிக்கு 19 பக்கத்திலான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான இந்தக் குழுவில், ஆறு ஆயர்கள் உட்பட 27 அருட்தந்தையர்களும் அங்கம் வகிக்கின்றனர்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு, சுமார் 5 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அதன்

பரிந்துரைகள் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து தங்களது கவலையை வெளிப்படுத்துவதாக தேசிய கத்தோலிக்க பேச்சாளர் குழு அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளது.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்டவர்கள் தொடர்பில், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படாமை குறித்தும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ரிஷாட் பதியூதீன், ரியாஜ் பதியூதீன், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்டவர்கள் தொடர்பில், மேலதிக விசாரணைகள் இடம்பெறாமை தொடர்பிலும் தேசிய கத்தோலிக்க பேச்சாளர் குழு கேள்வி எழுப்பியுள்ளது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...