ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கத்தோலிக்க பேச்சாளர்கள் குழுவினால் ஜனாதிபதிக்கு 19 பக்கங்களைக் கொண்ட கடிதம்!

Date:

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், தேசிய கத்தோலிக்க பேச்சாளர் குழு, ஜனாதிபதிக்கு 19 பக்கத்திலான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான இந்தக் குழுவில், ஆறு ஆயர்கள் உட்பட 27 அருட்தந்தையர்களும் அங்கம் வகிக்கின்றனர்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு, சுமார் 5 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அதன்

பரிந்துரைகள் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து தங்களது கவலையை வெளிப்படுத்துவதாக தேசிய கத்தோலிக்க பேச்சாளர் குழு அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளது.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்டவர்கள் தொடர்பில், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படாமை குறித்தும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ரிஷாட் பதியூதீன், ரியாஜ் பதியூதீன், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்டவர்கள் தொடர்பில், மேலதிக விசாரணைகள் இடம்பெறாமை தொடர்பிலும் தேசிய கத்தோலிக்க பேச்சாளர் குழு கேள்வி எழுப்பியுள்ளது.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...