ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கத்தோலிக்க பேச்சாளர்கள் குழுவினால் ஜனாதிபதிக்கு 19 பக்கங்களைக் கொண்ட கடிதம்!

Date:

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், தேசிய கத்தோலிக்க பேச்சாளர் குழு, ஜனாதிபதிக்கு 19 பக்கத்திலான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான இந்தக் குழுவில், ஆறு ஆயர்கள் உட்பட 27 அருட்தந்தையர்களும் அங்கம் வகிக்கின்றனர்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு, சுமார் 5 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அதன்

பரிந்துரைகள் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து தங்களது கவலையை வெளிப்படுத்துவதாக தேசிய கத்தோலிக்க பேச்சாளர் குழு அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளது.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்டவர்கள் தொடர்பில், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படாமை குறித்தும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ரிஷாட் பதியூதீன், ரியாஜ் பதியூதீன், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்டவர்கள் தொடர்பில், மேலதிக விசாரணைகள் இடம்பெறாமை தொடர்பிலும் தேசிய கத்தோலிக்க பேச்சாளர் குழு கேள்வி எழுப்பியுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...