கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக புதிதாக 20 தொலைக்காட்சி அலைவரிசைகள்

Date:

நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு கல்வி சேவைகளுக்காக புதிதாக 20 தொலைக்காட்சி அலைவரிசைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக
ஊடகத்துறை அமைச்சரும்,
ஊடகப்பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் தரம் 1 முதல் 13 வரையான வகுப்புகளுக்காக 13
தொலைக்காட்சி
அலைவரிசைகளும், பிரிவெனா கல்விக்காக 2 தொலைக்காட்சி
அலைவரிசைகளும்
ஆரம்பிக்கப்படவுள்ளன. அண்மையில் கண்டி, குண்டசாலை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற
சமுர்த்தி புலமைப்பரிசில் வழங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு
உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், சமுர்த்தி சௌபாக்கிய நிகழ்ச்சித்திட்டத்துடன், உயர்தர வகுப்பு மாணவர் ஒருவருக்காக
மாதாந்தம் தலா 1, 500 ரூபா வீதம், இரண்டு வருடங்களுக்கு நிதியுதவி
வழங்கும் நிகழ்வொன்றும்
இடம்பெற்றது.
இந்த திட்டத்தின் ஊடாக மாணவர் ஒருவருக்காக 10 மாதங்களுக்கான
நிதியுதவியாக தலா 15, 000 ரூபா வழங்கி வைக்கப்பட்டது

நாட்டின் மாணவர்களினது கல்வியை வீழ்ச்சியடைய செய்யாமல்
கவனித்துக்கொள்வது
அரசாங்கத்தினது கடமையாகும்
எனத் தெரிவித்த அமைச்சர், கல்வி
ஒரு நாட்டின் முதுகெலும்பு என்றும் எந்த சவால்கள் வந்தாலும் அதனை
நிவர்த்திக்கும் பொறுப்பை
அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்
எனவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

முன்னணி இஸ்லாமிய அறிஞர் மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வி காலமானார்

முன்னணி இஸ்லாமிய அறிஞரும், எழுத்தாளரும், கல்வியாளருமான மௌலானா  சையத் சல்மான் ஹுசைனி...

பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 18,412 தன்சால்கள் பதிவு!

பொசொன் பெளர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 18,000-க்கும் மேற்பட்ட ‘தன்சால்கள்’...

வரலாற்றுச் சிறப்புமிக்க பொசன் பௌர்ணமி தினம் இன்று!

இலங்கையில் பௌத்த தர்மம் உருவாகிய தினத்தை பொசன் பௌர்ணமி தினமாக பௌத்தர்கள்...

பல மாவட்டங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...