கொக்காவில் தாக்குதலின் 31 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று!

Date:

1990 ம் ஆண்டு கொக்காவில் செய்தி ஒலிபரப்பு கோபுரம் மற்றும் இராணுவ முகாம் மீதான தாக்குதலின் போது உயிரிழந்த கெப்டன் சாலிய அலதெனிய பி.டபிள்யூ.வி மற்றும் படையினர்கள் பொதுமக்கள் உள்ளிட்டவர்களின் 31 ம் ஆண்டு நினைவு தினம் இன்று (11) மாலை 5 மணியளவில் கொக்காவில் படை வீரர்கள் நினைவு தூபியில் இடம்பெற்றது.

 

652 ஆவது படை தலைமையகத்தின் படைத் தளபதியின் வழிகாட்டுதலுக்கு அமைவாக 6 ஆவது இலங்கை சிங்க ரெஜிமென்ட் படையணியின் படையினரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன் இராணுவ அணி வகுப்பு மரியாதையும் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

 

நிகழ்வில் வன்னி இராணுவ படைத் தலைமையக கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் டி.எம்.எச்.டி.பண்டார பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

 

அத்தோடு கிளிநொச்சி மாவட்ட இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட இராணுவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தியதோடு 6 ஆவது இலங்கை சிங்க ரெஜிமென்ட் படையணியின் இராணுவ வீரர்களால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...