கொழும்பில் டெல்டா திரிபுடன் 11 பேர் அடையாளம்!

Date:

அண்மையில் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்ட 18 பேரில் 11 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டிருப்பதாக, கொழும்பு மாநகரசபையின் பிரதான வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

 

அவர்களில் ஐந்து பேர் கெத்தாராம விளையாட்டரங்கில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டவர்கள்.இரண்டு பேர் தெமடகொடையிலும் இரண்டு பேர் வட கொழும்பிலும் உள்ளவர்கள் என்று அவர் கூறியுள்ளார்.

 

அதேநேரம் யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் டெல்டா திரிபுடனான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.இதன்படி நாட்டில் டெல்டா திரிபுடன் கூடிய 36 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...