நாட்டில் இன்று மேலும் 678 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 268,111 ஆக உயர்வடைந்துள்ளது.
அவ்வாறே, கொவிட் தொற்றில் இருந்து இன்று மேலும் 1.472பேர் குணமடைந்தனர்.
இதன்படி இதுவரையில் 238,131 பேர் கொவிட் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.