சமாதான நீதவான் பதவிக்கான விண்ணப்ப படிவத்தை நிரப்புவதில் தமிழ் மொழி நிராகரிப்பு ஜீவன் தொண்டமானின் பதிவு

Date:

சமாதான நீதவான் பதவிக்கான விண்ணப்ப படிவங்களில் “விண்ணப்பத்தை சிங்களம் அல்லது ஆங்கில மொழியில் பூரணப்படுத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நீதி அமைச்சருடன் தொடர்பு கொண்டு பேசியதையடுத்து நீதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

ஜீவன் தொண்டமானின் முகநூல் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “சமாதான நீதவான் பதவிக்கான விண்ணப்பப்படிவம் தமிழ் மொழியில் பூரணப்படுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட செய்தி வெளிவந்திருந்தது.

இதனையடுத்து, இது தொடர்பாக நான், நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது, இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதோடு தமிழ் மொழியும் இனிவரும் காலங்களில் உள்வாங்கப்படும் என தெரிவித்தார்” என்று ஜீவன் தொண்டமான் பதிவிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...