கொவிட் தடுப்பூசிகளுக்கான இலங்கையின் மருந்து கட்டுப்பாட்டு நிபுணர்கள் ஆலோசனை அமைப்பின் எட்டு உறுப்பினர்களில் மூன்று பேர் நேற்று பதவி விலகியுள்ளனர்.
சீனாவின் தடுப்பூசியான சினோவாக்கை இலங்கையில் பயன்படுத்த தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு ஒப்புதல் அளித்த பின்னர் இவர்கள் பதவி விலகியுள்ளனர்.
நோயெதிர்ப்பு நிபுணர் வைத்தியர் ராஜீவ டி சில்வா, வைராலஜிஸ்ட் வைத்தியர் காந்தி நாணயக்கார மற்றும் சுவாச மருத்துவர் பேராசிரியர் சன்ன ரணசிங்க ஆகியோரே பதவி விலகியுள்ளனர்.