சுற்றுலாப் பயணிகளை கவர புதிய திட்டம்!

Date:

கலாசாரத்தை பாதுகாத்து சுற்றுலாப் பயணிகளை கவரக் கூடிய வகையில் கண்டி, போகம்பறை சிறைச்சாலை வளாகம் புனரமைக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

 

கண்டி, போகம்பறை சிறைச்சாலை புனரமைப்பு தொடர்பாக மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.

 

மிக பழமை வாய்ந்த போகம்பறை சிறைச்சாலையின் புனரமைப்பு பணிகள் குறுகிய காலத்திற்குள் பூர்த்தி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

 

சுற்றுலாப் பயணிகள் நீண்ட காலம் கண்டியில் தங்கி இருக்கக் கூடிய வகையில் சுற்றுலா அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வது குறித்து கலந்துரையாடல் இடம் பெற்றதாக குறிப்பிட்ட அமைச்சர் கண்டிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ஓரிரு தினங்கள் மட்டுமே கண்டி விடுதிகளில் தங்கி வெளியேறுகின்றனர்.

 

இந்த நிலையை மாற்றி கண்டி கிராமங்களில் உள்ள சுற்றுலா இடங்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இடையில் நீண்ட கால தொடர்புகள் இருக்கக்கூடிய பரிவர்த்தனை இடமாக போகம்பறை சிறைச்சாலை புனரமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...