தனுஷ்க, குசல், திக்வெல்லவின் துர்நடத்தை குறித்து விசாரிக்க ஐவரடங்கிய குழு நியமனம்!

Date:

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின்போது, துர்நடத்தைகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்கள் தொடர்பான விசாரணைகளுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் ஐவரடங்கிய குழாம் ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

உயிர்குமிழி நடைமுறைக்கு முரணான வகையில் செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் தொடர்பில் இந்த குழாம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது.

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை குழாமில் இடம்பெற்றிருந்த மேற்படி மூன்று வீரர்களும், உயிர்குமிழி நடைமுறையை மீறியமை தொடர்பில் சமூகவலைத்தளங்கள் ஊடாக பகிரப்பட்ட காணொளியொன்றின் ஊடாக நிரூபணமானது.

இதனையடுத்து, குறித்த வீரர்கள் மூவரையும் நாட்டுக்கு உடனடியாக திருப்பியழைப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...