தேசிய முகவர் நிறுவனத்தின் உதவி முகாமையாளருக்கு பிணை!

Date:

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீவிபத்துக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் சந்தேக நபராக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த கப்பலின் தேசிய முகவர் நிறுவனத்தின் உதவி முகாமையாளர் சஞ்சீவ லங்காபிரிய சமரநாயக்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியதை அடுத்து கைது செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிமதி தமித் தொட்டவத்த முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

 

அதனடிப்படையில் சந்தேக நபரை 2 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா சரீர பிணைகள் இரண்டின் அடிப்படையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

 

சந்தேக நபர்கள் வௌிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவருடைய கடவுச்சீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...