பெல்ஜியம், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் தொடர் மழையால் வெள்ளப் பெருக்கு | 70க்கும் மேற்பட்டோர் பலி

Date:

பெல்ஜியம், ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுவரை 70க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில், நூற்றுக்கணக்கானோர் மாயமானதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐரோப்பாவின் மேற்குப் பகுதியில் இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஜெர்மனியின மேற்குப் பகுதியில் உள்ள Rhineland Palatinate மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளும் கட்டிடங்களும் உருக்குலைந்து கிடக்கின்றன. வீட்டின் மேற்கூரையில் தஞ்சம் அடைந்த மக்களை மீட்கும் பணியில் ராணுவம் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. ஜெர்மனியில் வெள்ளத்தில் சிக்கி ஏறத்தாழ 58 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெல்ஜியத்தில் வாலோனியா மாகாணத்தில் கனமழை காரணமாக எங்கும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க இத்தாலி விமானப்படை விமானங்கள் விரைந்துள்ளன. லெய்ஜ் (Liège) நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. முக்கிய பகுதிகளை மழைநீர் சூழ்ந்ததால் பொது மக்கள் வாகனங்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் கனமழை மற்றும் வெள்ளத்துக்கு 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கானோர் மாயமானதாக தகவல் வெளியாகி உள்ளது.

https://youtu.be/19qmMelHsZ4

Popular

More like this
Related

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...