மேலும் 16 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு!

Date:

சீனாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட மேலும் 16 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசி தொகையுடன் கூடிய விமானம் இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளது.

 

சீனாவின் பீஜிங் நகரில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 565 என்று தடுப்பூசிகளை எடுத்து வந்த விசேட விமானம், இன்று காலை 8 மணியளவில் இலங்கை வந்தடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

 

அத்துடன் தடுப்பூசிகளை எடுத்துவந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான மற்றுமொரு விமானம் இன்று காலை 10.10 மணியளவில் கட்டுநாயக்க விமானத்தை வந்தடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

சீனா அரசாங்கத்தினால் ஒரே தடவையில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட அதிகளவான சினோபார்ம் தடுப்பூசி தொகை இதுவாகும்.

 

அதனடிப்படையில் இதுவரையில் சீன அரசாங்கத்தினால் 27 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...