ரயில் கடவையில் இடம்பெற்ற பயங்கர விபத்து!

Date:

பெண் ஒருவர் செலுத்தி வந்த மோட்டார் வாகனம் ஒன்று நேற்று (06) மாலை கிருலபனை பூர்வாராம ரயில் கடவையில் ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த மோட்டார் வாகனத்தில் மேலும் ஒரு பெண் பயணித்துள்ள நிலையில் குறித்த இருவரும் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நுகேகொடை ரயில் நிலையத்தினால் ரயில் கடவை கேட்டை மூடுவதற்கான உரிய சமிக்ஞை பெற்றுக் கொடுக்காததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்தில் மோட்டார் வாகனம் கடுமையாக சேதம் அடைந்துள்ளது.கொள்ளுபிட்டியில் வேலைத் தளத்தில் இருந்து மஹரகமவில் அமைந்துள்ள வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்த போது குறித்த இரு பெண்களும் விபத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

கொழும்பில் இருந்து பாதுக்கை நோக்கி பயணித்த ரயில் ஒன்றிலேயே குறித்த மோட்டார் வாகனம் மோதியுள்ளது.

விபத்தில் சுமார் 8 அடி தூரம் மோட்டார் வாகனம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...