வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த இராணுவ அதிகாரி கைது

Date:

மின்னேரியா தேசிய பூங்காவில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரியை ஹபரண பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இராணுவ அதிகாரி ஹபரண பொலிஸ் நிலையத்தில் இன்று (01) காலை சரணடைந்துள்ளதாகவும், கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கடந்த 23 ஆம் திகதி வனவிலங்கு அதிகாரிகளின் கடமைக்கு குறித்த இராணுவ அதிகாரி இடையூறு விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதனை அடுத்து இரு தரப்பிலும் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(பின்னிணைப்பு – 12.40 pm) மின்னேரியா தேசிய பூங்காவில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...