இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களுக்கு இடம்பெற்ற விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுள் 7 பேர் மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏனைய இருவரும் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. சிறிய வாகனங்களில் பயணிப்பவர்கள் அதிகளவில் விபத்துக்கு உள்ளாவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். எனவே சிறிய வாகனங்களில் பயணிப்பவர்கள் மிகவும் அவதானமாக பயணிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.