ஹரீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் | விசாரணைகள் ஆரம்பம் 

Date:

இலங்கையில் அரங்கேறிய உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணாண்டோவிடம் சிஐடியினர் இன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், புலனாய்வு பிரிவை சேர்ந்த ஒருவருக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் தொடர்பிருப்பதாக சிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானிஅபயசேகர தெரிவித்திருந்தார் என ஹரின்பெர்ணாண்டோ தெரிவித்திருந்தமை தொடர்பிலேயே சிஐடியினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.
புலனாய்வு பிரிவை சேர்ந்த அந்த நபரை சிஐடியினர் கைதுசெய்து விசாரணை செய்தனர்,எனினும் இராணுவபுலனாய்வு பிரிவினர் அவரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர் என ஹரீன்பெர்ணான்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பிலேயே சிஐடியினர் இன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

விவாகரத்து மற்றும் முஸ்லிம் திருமணச் சட்டம் தொடர்பான இரண்டு தனிநபர் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

இலங்கையின் தனிநபர் சட்டங்களை நவீனமயமாக்கும் நோக்கில், ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் ‘காஷ்மீர் ஒற்றுமை தினம்’ அனுஷ்டிப்பு

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு...

கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்.

20 க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறும் காலப்பகுதியில்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் 50 மி.மீ. இற்கும் அதிக மழைக்கு சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...