இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் இலங்கை 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி!

Date:

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டி 20 போட்டியில் இலங்கை 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணிக்கு அழைப்பு விடுத்தது.

 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

 

இந்திய அணி சார்பில் அணித்தலைவர் சிகர் தவான் அதிகபட்சமாக 40 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.பந்து வீச்சில் அகில தனஞ்சய 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

 

அதன்படி, 133 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

 

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.மினோத் பானுக 36 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

 

பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.இதற்கமைய, மூன்று போட்டிகள் கொண்ட  டி20 தொடர் 1-1 கணக்கில் தற்போது சமநிலையில் உள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...