இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு கேலி சித்திரம் வரைந்த ஓவியர் காலமானார்

Date:

இறைத்தூதர் நபிகள் (ஸல்) தொடர்பாக கேலிச்சித்திரம் (கார்ட்டூன்) வரைந்து முழு உலகத்திற்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய டென்மார்க் ஓவியர் கேர்ட் வெஸ்டர்கார்ட் தனது 86 ஆவது வயதில் ஞாயிற்றுக்கிழமை (18) காலமானார்.

நீண்ட காலமாக சுகவீனமடைந்திருந்த அவர், தனது படுக்கையில் காலமானார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கேர்ட் வெஸ்டர்கார்ட் (Kurt Westergaard) வரைந்த 12 ஓவியங்கள், 2005 ஆம் ஆண்டு ஜெய்லண்ட்ஸ் போஸ்டன் (Jyllands-Posten) எனும் டென்மார்க் பத்திரிகையில் வெளியாகின.

அக்கார்ட்டூன்கள் ஆரம்பத்தில் அதிகம் கவனிக்கப்படவில்லை எனினும், 2 வாரங்களின் பின் டென்மார்க் தலைநகர் கொப்பன்ஹேகனில் மேற்படி கார்ட்டூன்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. அதையடுத்து, இக்கார்ட்டூன்கள் தொட்ரபாக டென்மார்க் அரசிடம் முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

2006 பெப்ரவரியில் உலகின் பல நாடுகளிலும் டென்மார்க்குக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

2010ஆம் ஆண்டில் வெஸ்டர்கார்ட்டை கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் 28 வயது சோமாலிய இளைஞனை கத்தியொன்றுடன், வெஸ்டர்கார்ட்டின் வீட்டுக்கு அருகில் பொலிஸார் கைது செய்தனர்.

கேர்ட் வெஸ்டர்கார்ட், தனது கடைசி காலத்தில் இரகசிய இடமொன்றில் பொலிஸ் பாதுகாப்புடன் வசித்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...