இலங்கையில் டெல்டா திரிபு குறித்து அறிக்கையிடப்படும்போது பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது பொருத்தமில்லை  | பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம்

Date:

இலங்கையில் பல்வேறு பகுதிகளிலிருந்து டெல்டா கொவிட் திரிபுகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் பயணக் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது பொருத்தமானதல்லவென பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், டெல்டா வகையானது எதிர்காலத்தில் நாட்டில் பரவக்கூடிய பிரதான கொவிட் வகையாக மாறும் என அதன் தலைவர் உபுல் ரோஹண சுட்டிக்காட்டுகிறார். தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்திய பல நாடுகளும் டெல்டா கொவிட் திரிபு பரவுவதால் பயணக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக உபுல் ரோஹன கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்,
“எவ்வாறாயினும் அடுத்த சில நாட்களில், கொவிட் -19 டெல்டா வகை இலங்கையின் முன்னணி தொற்றுநோய்களில் ஒன்றாக மாறும். டெல்டா வகை முதன்மையான இனமாக மாறினால், இலங்கை முன்னெப்போதையும் விட ஆபத்தான ஒரு தொற்று நோயை எதிர்கொள்ளும். இந்தச் சூழ்நிலையை அரசாங்கமும் மக்களும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். எதிர்காலத்தில் நாட்டில் ஒரு பேரழிவு சூழ்நிலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அது மிகவும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைக்கு வழிவகுக்கும்.” என்றார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...