இலங்கையில் மேலும் 581 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.மேலும் இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 266,211 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் மேற்கொண்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மிக குறைந்த அளவிலேயே பிசிஆர் பரிசோதனைகள் மேட்கொள்ளப்படுகிறது அதன் காரணமாக தொற்றலர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.