இலஞ்ச ஊழல் வழக்கில் இருந்து நிச்சங்க சேனாதிபதி உட்பட இருவர் விடுதலை!

Date:

355 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக வழங்கியமை மற்றும் பெற்றுக் கொண்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த எவன்கார்ட் நிறுவன தலைவர் நிச்சங்க சேனாதிபதி மற்றும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோரை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இன்று (27) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இதன்போது குறித்த இருவருக்கும் எதிராக மீண்டும் வழக்கு தாக்கல் செய்யும் உரிமையின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப் பத்திரிகையை இரத்து செய்யுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தனக்கு அறிவிப்பு விடுத்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்ப்பில் ஆஜரான அதன் பிரதி பணிப்பாளர் நாயகம் துஷாரி ஜயரத்ன நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...