இலஞ்ச ஊழல் வழக்கில் இருந்து நிச்சங்க சேனாதிபதி உட்பட இருவர் விடுதலை!

Date:

355 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக வழங்கியமை மற்றும் பெற்றுக் கொண்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த எவன்கார்ட் நிறுவன தலைவர் நிச்சங்க சேனாதிபதி மற்றும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோரை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இன்று (27) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இதன்போது குறித்த இருவருக்கும் எதிராக மீண்டும் வழக்கு தாக்கல் செய்யும் உரிமையின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப் பத்திரிகையை இரத்து செய்யுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தனக்கு அறிவிப்பு விடுத்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்ப்பில் ஆஜரான அதன் பிரதி பணிப்பாளர் நாயகம் துஷாரி ஜயரத்ன நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தார்.

Popular

More like this
Related

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் ‘காஷ்மீர் ஒற்றுமை தினம்’ அனுஷ்டிப்பு

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு...

கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்.

20 க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறும் காலப்பகுதியில்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் 50 மி.மீ. இற்கும் அதிக மழைக்கு சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...