ஓட்டமாவடியில் இதுவரையில் 1001 கொவிட் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது!

Date:

மட்டக்களப்பு மாவட்டம் ஒட்டமாவடியில் நேற்று (14) நிலவரப்படி மொத்தம் 1001 கொவிட் தொற்றால் இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

 

946 முஸ்லிம்கள், 24 இந்துக்கள், 16 கிறிஸ்தவர்கள், மற்றும் 15 பெளத்தர்கள் கொவிட்டினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. அலி ஜாஹிர் மெளலானா தெரிவித்தார்.

 

முஸ்லீம் சமூகம் மற்றும் எதிர்க்கட்சியின் கடுமையான முயற்சிக்குப் பிறகு, கொவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களை ஓட்டமாவடி, மட்டக்களப்பு இடத்தில் அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

 

இரனைதீவிலே அடக்கம் செய்ய முதலில் அங்கீகரிக்கப்பட்டது, ஆனால் குடியிருப்பாளர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு ரத்து செய்யப்பட்டது.

 

அம்பாறை மாவட்டத்தில் உள்ள இரக்காமம் பகுதி, கொவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு இடமாக உள்ளது.

 

இருப்பினும், இன்றுவரை ஓட்டமாவடி புதைகுழியில் மட்டுமே அடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...

சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பில் வெலிகம மத்ரஸதுல் பாரி மாணவன் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த...