ஓய்வூதிய திட்டத்துக்குள் உள்வாங்கப்படாத ஊழியர்களுக்காக சமூக பாதுகாப்பு நிதியம்!

Date:

நாட்டில் ஓய்வூதிய கொடுப்பனவு கிடைக்கப்பெறாத பகுதிநிலை அரச ஊழியர்கள், தனியார் மற்றும் முறைசாரா துறையின் ஊழியர்களுக்கான சமூக பாதுகாப்பு நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.

தொழில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பூர்வாங்க ஆவணத்தை தயாரிப்பதற்கு, பணிப்பாளர் சம்மேளனம், தொழிற்சங்கம் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

 

தொழில் அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற தேசிய தொழில் ஆலோசனை சபை கூட்டத்தில், இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

வயோதிபப் பருவத்தில் பொருளாதார பாதுகாப்பு இல்லாத பிரஜைகளுக்கு நன்மை பயக்கும் வகையில், சமூக பாதுகாப்பு நிதியம் செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...