ஓய்வூதிய திட்டத்துக்குள் உள்வாங்கப்படாத ஊழியர்களுக்காக சமூக பாதுகாப்பு நிதியம்!

Date:

நாட்டில் ஓய்வூதிய கொடுப்பனவு கிடைக்கப்பெறாத பகுதிநிலை அரச ஊழியர்கள், தனியார் மற்றும் முறைசாரா துறையின் ஊழியர்களுக்கான சமூக பாதுகாப்பு நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.

தொழில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பூர்வாங்க ஆவணத்தை தயாரிப்பதற்கு, பணிப்பாளர் சம்மேளனம், தொழிற்சங்கம் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

 

தொழில் அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற தேசிய தொழில் ஆலோசனை சபை கூட்டத்தில், இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

வயோதிபப் பருவத்தில் பொருளாதார பாதுகாப்பு இல்லாத பிரஜைகளுக்கு நன்மை பயக்கும் வகையில், சமூக பாதுகாப்பு நிதியம் செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...