கண்காணிப்பை பலப்படுத்த ஜோ பைடன் பணிப்பு!

Date:

கொரோனா குறித்த வதந்திகளை கண்காணிக்க தவறுவதன் மூலம் சமூக வலைத்தளங்கள் மக்களை கொல்கின்றன என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.

தடுப்பூசிகள் மற்றும் தொற்றுநோய் குறித்து பொய்யைப் பரப்புவதில் பேஸ்புக் போன்ற தளங்களின் பங்கு குறித்து வெள்ளை மாளிகையில்நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

எங்களிடம் உள்ள ஒரே தொற்றுநோய், கண்டறியப்படாதவர்களிடையே உள்ளது என்வும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க சர்ஜன் ஜெனரல் விவேக் மூர்த்தி தடுப்பூசிகளைப் பற்றிய தவறான தகவலை பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் என்று அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு பைடனின் கருத்துக்கள் வந்துள்ளன.

வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் ஜென் சாகி, பேஸ்புக் மற்றும் பிற தளங்கள் தடுப்பூசிகளைப் பற்றிய தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமானதாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்க அதிகாரிகள், தடுப்பூசிகள் காரணமாக வைரஸிலிருந்து இறப்புகள் மற்றும் கடுமையான நோய்கள் முற்றிலும் தடுக்கக்கூடியவை என்று அறிவுறுத்தினர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...